கடலூர், எண்ணூர், திருவொற்றியூரில் வீடுகளில் புகுந்த கடல் நீர்
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடலூர், சென்னை எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் கடல் பகுதியில் நேற்று இரவு ராட்சத அலைகள் எழுந்தன. கடல் அரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டுள்ள சுவரைத் தாண்டி அலைகள் இந்திராகாந்தி குப்பம், அப்பர் நகர், சின்ன குப்பம், பெரிய குப்பம், நெட்டு குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து எண்ணூர் பெரிய குப்பம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விசைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அதே போல கடலூர் சில்வர் பீச்சில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் புகுந்து கடலை ஒட்டிய சாலையை அரித்தது.
பெண்ணையாறு, கெடிலம் மற்றும் உப்பனாற்று முகத்துவாரங்களிலும் கடல் நீர் புகுந்தது. இந்த மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
அதே போல காரைக்காலிலும் தீவிர கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications