வாஷிங்டனில் இன்று ஜி-20 மாநாடு!

அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் இந்த சிக்கலுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு என்ற பெயரில் வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட உலகின் டாப் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சிதம்பரம் கருத்து:
பிரதமருடன் சென்றுள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அளவிட முடியாது. ஆனாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதால், பாதிப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு.
சர்வதேச அளவில் கடன் வட்டி வீதம் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் அதிகமாகவே உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலக பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளி்ல் அதிக முதலீட்டைச் செய்ய வேண்டும் என்றார்.
சர்வதேச சிக்கலுக்கு இந்த மாநாட்டில் உடனடி தீர்வு ஏதும் கிடைத்துவிடாது என்றே பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதகின்றனர். ஆனாலும் சில முக்கியமான முடிவுகள் மூலம் நிலைமை மேலும் மோசமாவதை தடு்க்க முடியும் என்கினறனர்.












Click it and Unblock the Notifications