'புறக்கணிப்பை' புறக்கணித்த காஷ்மீர்-44% வாக்குப்பதிவு

கடும் பனிப்பொழிவு மற்றும் பிரிவினைவாத அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு இடையே இந்த தேர்தல் நடைபெறுகிது.
காஷ்மீர் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கார்கில், பந்திபோரா, பூஞ்ச் மற்றும் லே ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பத்து தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதிகளில் சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 1038 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு புறம் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. எனினும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பகல் வரை 10 தொகுதிகளையும் சேர்த்து 10 சதவீத வாக்குகள் பதிவாகியின. மாலை 4 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குரேஸ் மற்றும் பந்திப்போரா பகுதிகளில் 28 நடமாடும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மீதமுள்ள 6 கட்ட தேர்தல் வரும் 23, 30, டிசம்பர் 7, 13, 17 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications