'புறக்கணிப்பை' புறக்கணித்த காஷ்மீர்-44% வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

Kashmir map
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 10 தொகுதிகளில் இன்று நடந்த வாக்குப் பதிவில் மிக விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. மாலை 4 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

கடும் பனிப்பொழிவு மற்றும் பிரிவினைவாத அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு இடையே இந்த தேர்தல் நடைபெறுகிது.

காஷ்மீர் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கார்கில், பந்திபோரா, பூஞ்ச் மற்றும் லே ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பத்து தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளில் சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 1038 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு புறம் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. எனினும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பகல் வரை 10 தொகுதிகளையும் சேர்த்து 10 சதவீத வாக்குகள் பதிவாகியின. மாலை 4 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குரேஸ் மற்றும் பந்திப்போரா பகுதிகளில் 28 நடமாடும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மீதமுள்ள 6 கட்ட தேர்தல் வரும் 23, 30, டிசம்பர் 7, 13, 17 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+