Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் ராட்சத அலைகள்: மீனவர்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ராட்சத அலைகள் எழுந்து வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்கப் போக முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை கோவளம் கடற்பகுதியில் நேற்று வழக்கத்திற்கு விரோதமாக ராட்சத அலைகள் எழுந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் பீதியடைந்தனர். மீன் பிடிக்கப் போகவில்லை.

அவர்கள் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கு சிதறிக் கிடந்தது. மீன் வலைகள் பல கடலுக்குள் போய் விட்டது.

இரவு 9 மணியளவில் 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததால் மீனவர்கள் பெரும் பீதியடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு அலைகள் கோர தாண்டவமாடின.

இதேபோல திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ராட்சத அலைகள் எழுந்து வருவதாலும், கடல் கொந்தளிப்புடன் உள்ளதாலும் மீனவர்கள் மீன் பிடிக்கப் போக முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+