சட்டக் கல்லூரி வன்முறை-போராசியர்களுக்கு தொடர்பு: வீரமணி
தஞ்சை: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவத்தில் கல்லூரி போராசியர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக திராவிட கழகத் தலைவர் வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில்,
சட்டத்தை அமல்படுத்துவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. சென்னை சட்டக் கல்லூரியில் இந்த வன்முறையை தூண்டியவர்கள் யாராக இருந்தாலும் ஜாதி, மதம், கட்சி வேறுபாடின்றி உடனே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இடையே மோதலுக்கு காரணமாக சில பேராசியர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் அது உண்மை என தெரிய வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் திமுக எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க மாற்று வழி என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications