சென்செக்ஸ்-நிப்டி: கீழே இழுத்த ஐடி பங்குகள்
மும்பை: நேற்று மீண்டும் 9,000 புள்ளிகளுக்குக் கீழே போன மும்பை பங்குச் சந்தை இன்று கொஞ்சம் 'தம் கட்டி' மேலே வந்து 9236.71 புள்ளிகளைத் தொட்டுவிட்டு மீண்டும் சரிந்துவிட்டது.
நேற்று 8,971 ஆக இருந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 130 புள்ளிகளைப் பெற்றது.
எச்டிஎப்சி, கிராசிம், ரிலையன்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஐடிசி, ரான்பாக்ஸி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களி்ன் பங்குகள் விலை சில சதவீதம் உயர்ந்ததால் இந்த புள்ளிகள் உயர்வு கிடைத்தது.
ஆனால், சாப்ட்வேர் நிறுவனங்களான சத்யம், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிவற்றின் பங்கு விலைகளில் இன்று காலை முதலே வீழ்ச்சி தான் காணப்பட்டது. அத்தோடு கனிம நிறுவனங்களின் பங்குகளும் படுத்துக் கொள்ள பிற்பகலில் சென்செக்ஸ் மீண்டும் 8905.66 என்ற நிலைக்கு வந்துவிட்டது.
அதே நிலை தான் தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் காணப்பட்டது. இப்போது 2672.10 என்ற புள்ளியில் தள்ளாடிக் கொண்டுள்ளது நிப்டி.












Click it and Unblock the Notifications