For Quick Alerts
For Daily Alerts
Just In
பள்ளிக்கூட காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம்
மதுரை: மதுரை அருகே பள்ளியில் படிக்கும் மாணவருக்கும், மாணவிக்கும் ஏற்பட்ட காதல் காரணாக அந்த ஜோடிகள் எஸ்கேப் ஆனது.
மதுரை அருகே உள்ளது பெருமாள் கோவில்பட்டி.
இந்த ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் முத்துக்கிருஷ்ணன் (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவி ஜெயபிரதாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதனால் தனது மகளை முத்துக்கிருஷ்ணன் கடத்திவிட்டதாக ஜெயப்பிரதாவின் பெற்றோர் சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, November 19, 2008, 12:59 [IST]