இல்மனைட் மணல் மூலம் 340 கோடி வருமானம்
நாகர்கோயில்: மத்திய அரசுக்கு சொந்தமான இல்மனைட் மணல் ஆலை மூலம் ரூ 340 கோடி வருமானம் கிடைத்ததாக மணல் ஆலை தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
நாகர்கோவில் அருகே உள்ளது மணவாளக்குறிச்சி. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான இல்மனைட் மணல் ஆலை உள்ளது.
இங்கிருந்து இல்மனைட் ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணல் ஆலை தலைவர் சிவசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வகை அரிய மணல் மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ 340 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு 4 லட்சம் டன் இல்மனைட் உற்பத்தி செய்துள்ளோம். கன்னியாகுமரி மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் தோரியம் என்ற தாதுப்பொருள் கிடைத்து வருவதால் தமிழக அரசு மூலம் ஆலை விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறோம்.
தோரியம் தாது பொருட்கள் அணுசக்தி துறைக்கு அதிகம் பயன்படுவதால் வருங்கால தேவையை கருத்தில் கொண்டு அதை தேவையான அளவு முறையாக சேமித்து வைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications