பிரக்யா: பாஜகவுக்கு இந்து மகா சபை கண்டனம்
டெல்லி: தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் எந்த ரூபத்திலும் இந்து மகா சபை ஆதரிக்காது. பிரக்யா சிங் விஷயத்தை வைத்து ஆதாரம் பார்க்க பாஜக முயலக் கூடாது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அகில பாரத இந்து மகா சபை செய்தித் தொடர்பாளர் பிரவீன் சர்மா கூறுகையில், இந்துக்களின் மத உணர்வுகளை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயலுகிறது பாஜக.
முன்பு ராமர் ஜென்ம பூமி விவகாரத்தில் அப்படித்தான் அது நடந்து கொண்டது. இப்போது மாலேகான் சம்பவத்தை வைத்து இந்துக்களின் கவனத்தைத் திருப்பி அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அது முயலுகிறது.
பாஜகவும், சங் பரி்வார் அமைப்புகளும், இந்துக்களை காலம் காலமாக முட்டாளாக்கி வருவதைப் பார்த்து நாங்கள் சோர்வடைந்து விட்டோம்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக வக்கீல் வைக்கும் செலவுக்கு என்று கூறி நிதி திரட்டும் முயற்சியிலும் சங் பரி்வார் அமைப்புகள் இறங்கி விட்டன.
இந்த செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. இது தீவிரவாத செயலாகும். இதேபோல அனைத்து வகையான தீவிரவாதத்தையும் இந்து மகா சபை கண்டிக்கிறது.
தீவிரவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயலும் பாஜக ஒரு சந்தர்ப்பவாத கட்சியாகும். சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அது நடத்தி வருகிறது.
இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும், பாஜக, வி.எச்.பி, பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஆகிய அமைப்புகள் உண்மையில் என்ன பங்காற்றியுள்ளன என்று இந்து சமுதாயத்தினர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்றார் அவர்.
மகா சபை தலைவர் சந்திர பிரசாத் கெளசிக் கூறுகையில், சம்பந்தமில்லாத தீவிரவாதப் பிரச்சினை மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருவருக்கொருவர் மோத வைக்க முயற்சிக்கிறது பாஜக. அப்போதுதான் அத்வானி பிரதமராக முடியும் என அது கருதுகிறது என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கருத்து தெரிவிக்கையில், இதனால் என்ன பயன்?, இதை யார் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?, இதில் அரசியல் முக்கியத்துவம் என்ன இருக்கிறது?. ஒருவேளை காங்கிரஸ் கட்சி இப்படிப் புகார் கூறியிருந்தால் நாங்கள் பதிலளித்திருப்போம் என்றார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications