தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் கமிஷனராக இருந்த பி.செந்தில்குமார், அந்தத் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறை கமிஷனராகப் பணியாற்றிய நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்படுகிறார்.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் அம்புஜ் சர்மா, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலாளர் தேவ் ராஜ் தேவ், நில சீர்திருத்தத் துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நில வரித் துறை இயக்குனராகவும் அவர் செயல்படுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications