நாளை சாய் பாபாவின் 83வது பிறந்தநாள்

Subscribe to Oneindia Tamil

Sathya sai baba
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 83வது பிறந்தநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டு உலகம் முழுவதும் இருந்தும் அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடுகள், மதங்கள் தாண்டி லட்சக்கணக்கானவர்களை தன் வசம் ஈர்த்தவர் சாய் பாபா.

தனது பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் ஏராளமான சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பாபா, இலவச கல்வி நிறுவனங்கள், அதி நவீன மாபெரும் இலவச மருத்துவமனைகள், குழந்தைகள் நலத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், சுதாராதத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவருக்கு உலகம் முழுவதும் 166 நாடுகளில் 10,000க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன.

சென்னைக்கு தந்த குடிநீர் திட்டம்:

ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை நகருக்கு தண்ணீர் வரும் கண்டலேறு-பூண்டி கால்வாய் எனப்படும் தெலுங்கு கங்கை கால்வாயை தனது அறக்கட்டளை மூலம் பல நூறு கோடி செலவில் சீரமைத்துத் தந்தவர்.

ஆந்திராவிலும் ஏராளமான குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+