தடுப்பூசி போட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் !
Subscribe to Oneindia Tamil
பாபநாசம்: பாபநாசம் அருகே தடுப்பூசி போட்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பூதங்குடியில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் 165 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.
அவ்வாறு போடப்பட்ட தடுப்பூசி காரணமாக, மாணவிகள் இந்துமதி, வினோதா, சிசிகலா, கல்பனா, பத்மா, மீரா கற்பகம் நஜீரா, ஆகிய மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக மாணவிகளின் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications