குற்றத் தடுப்பு வழக்கு கோர்ட்டில் இன்று பிரக்யா ஆஜர்
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 9 பேரும் மகாராஷ்டிர குற்றத் தடுப்புச் சட்ட தனி நீதிமன்றத்தில் (எம்.சி.ஓ.சி.ஏ) ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் மிகக் கடுமையான சட்டம்தான் எம்.சி.ஓ.சி.ஏ. சமீபத்தில் பிரக்யா உள்ளிட்ட 9 பேர் மீது இந்த சட்டத்தைப் பிரயோகித்தது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ்.
இதையடுத்து இந்த சட்டத்தின் கீழ் இவர்களைக் கைது செய்வது தொடர்பாக எம்.சி.ஓ.சி.ஏ கோர்ட்டில் அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஒய்.டி.ஷிண்டே, பிரக்யா, புரோஹித், ஷாம்லால் சாஹு, சிவநாராயணன் சிங், அஜய் ரகீர்கர், ஜெகதீஷ் மாத்ரே, ராகேஷ் தவதே, சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் 9 பேரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications