நரிமன் ஹோட்டல்-யூதர்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்
அங்கு 5வது மாடியில் மேலும் பல தீவிரவாதிகள் பிணயக் கைதிகளுடன் பதுங்கியுள்ளனர். இவர்களை என்எஸ்ஜி கமாண்டோக்கள் தாக்கி வருகின்றனர்.
நரிமன் ஹவுஸ் என்பது மும்பையில் வசிக்கும் ஹசிதிக் யூத இனத்தின் சபாத்-லுவாவிட்ஸ் பிரிவினரின் (Chabad-Lubavitch movement of Hasidic Jews) தலைமையகமாகும்.
5 மாடிக்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் சுமார் 15 யூதர்கள் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலிய குடியுரிமையும் உள்ளவர்கள்.
இங்கு தீவிரவாதிகள் 2வது மாடியிலும் 3வது மாடியிலுமாகப் பிரிந்து பிணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தனர்.
இந்தத் தீவிரவாதிகள் மீது நேற்றிரவு முழுவதும் வெளியில் இருந்தும் உள்ளே புகுந்தும் கமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், தீவிரவாதிகள் பிணயக் கைதிகளுடன் அந்த கட்டடத்துக்குள் இடம் மாறிக் கொண்டே இருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை8.45 மணியளவில்20 கமாண்டோக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த ஹோட்டலின் மாடியில் குதித்து உள்ளே புகுந்தனர்.
ஆனால் மாலை வரை இந்த ஆபரேசன் நீடித்தது. நெடுநேரமாக தீவிரவாதிகளை வெளியேற்ற முடியாததால் அவர்கள் மீது போலீசார் ராக்கெட் குண்டுகளை வீசி நிலை குலைய வைத்து பின்னர் கமாண்டோக்கள் மாலையில் உள்ளே புகுந்தனர்.
அங்கே இரண்டாவது மாடியில் 3 பிணயக் கைதிகளின் உடல்கள் கிடந்தன. இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் 4வது மாடிக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து 4வது மாடிக்குச் சென்ற கமாண்டோக்கள் அங்கிருந்த 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அங்கு தீவிரவாதிகளால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் கிடந்தன.
இப்போது தீவிரவாதிகள் 5வடி மாடியில் பிணயக் கைதிகளுடன் பதுங்கியுள்ளனர். இங்கு 6 தீவிரவாதிகளிடம் வரை உள்ளதாகத் தெரிகிறது. அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அவர்கள் பிணயக் கைதிகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால் கமாண்டோக்கள் மிக ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த கட்டடம் அமைந்துள்ள இடம் மிகக் குறுகலான இடம் ஆகும். ஏராளமான மின் கம்பங்கள், சுற்றிலும் மாடிகள் அமைந்துள்ள இந்த இடத்தில் ஹெலிகாப்டர்களை இயக்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் மிகத் திறமையாக குறுகலான சந்து வழியே ஹெலிகாப்டரை இயக்கி நரிமன் ஹவுசின் மேல் கமாண்டோக்களை இறக்கினார் எம்.ஐ-15 ஹெலிகாப்டரின் விங் கமாண்டர்.
இதற்கிடையே அந்த கட்டத்தில் இருந்த ஒரு முதிய பெண்ணையும் அவரது பேரனையும் தீவிரவாதிகள் காலையில் விடுவிடுத்தனர். இந்த சிறுவனின் தாய்-தந்தை உள்ளே பிணயக் கைதிகளாக உள்ளனர். இதில் சிறுவனின் தாய் மயங்கிக் கிடப்பதாக வெளியே வந்த முதிய பெண் கூறியுள்ளார்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?













Click it and Unblock the Notifications