மும்பை தாக்குதல்: கண்டித்து வக்கீல்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: மும்பை தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட வக்கீல்கள் ஸ்டிரைக் செய்தனர்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் குமரி மாவட்ட வக்கீல்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி கோர்ட்களில் வக்கீல்கள் இன்று பணிக்கு செல்லவில்லை.
மாவட்டம் முழுக்க சுமார் 2000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications