குபேரை கோட்டைவிட்ட கடலோர காவல் படை: கடற்படை தளபதி புகார்

குபேர் படகு கடத்தப்பட்டது குறித்து கடலோரக் காவல் படைக்கு தாங்கள் தகவல் தந்ததாகவும், ஆனால் அந்தப் படகை பிடித்த கடலோரக் காவல் படை அதன் டாகுமெண்ட்களை சரிபார்த்துவிட்டு விடுவித்துவிட்டதாகவும் கடற்படை கூறியுள்ளது. இத் தகவலை கடற்படைத் தளபதி அட்மிரல் சுரீஷ் மேத்தாவே தெரிவித்துள்ளார்.
அந்தப் படகுக்குள் கடலோரக் காவல் படையினர் இறங்கி சோதனை நடத்தியிருந்தால் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் கடற்படை-கடலோரக் காவல் படைக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ள அவர், தினமும் அரபிக் கடலில் 50,000 படகுகள் வந்து செல்கி்ன்றன. அவை அனைத்தையும் கண்காணிப்பது என்பதும் சாத்தியமல்ல என்றும் கூறினார்.
மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிரான கமாண்டோக்களின் ஆபரேசனை டிவி்க்கள் நேரடியாக ஒளிபரப்பியதையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.












Click it and Unblock the Notifications