தமிழக பாதுகாப்பு நிலைமை: அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உளவுப் பிரிவு பல்வேறு மாநிலங்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் முதல்வரை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது, இது வழக்கமான மாதாந்திர கூட்டம்தான்.

மாதா மாதம், தமிழகத்தை அமைதியுடன் வைத்திருக்க செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அதுபோன்ற ஆய்வுக் கூட்டம் இது என்றார்.

ப.சிதம்பரத்தின் புதிய பொறுப்பு குறித்து கேட்டபோது, ஏற்கனவே உள்துறை இணை அமைச்சராக ப.சிதம்பரம் செயல்பட்டுள்ளார். தற்போது உள்துறை அமைச்சராக இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்க அவர் பாடுபடுவார் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+