ஹைதராபாத்தில் துப்பாக்கிச் சூடு-தீவிரவாதிகள்?
Subscribe to Oneindia Tamil

பழைய ஹைதராபாத் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று பகல் 1.30 மணியளவில் அந்தப் பகுதியை முற்றுகையிட்ட போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
ஒரு ஹார்ட்வேர் கடையில் சோதனைக்காக போலீசார் நுழைந்தபோது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு காவலர் பலத்த காயமடைந்தார். இன்னொருவர் லேசான காயத்துடன் தப்பினார்.
போலீசாரை சுட்ட நால்வருமே தப்பியோடிவிட்டனர். இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications