நெல்லையில் 9 கிலோ வெடி மருந்து குவியல்!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: நெல்லை அருகே 9 கிலோ வெடி மருந்து குவியல் கிடைத்ததால் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ம் தேதியை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகி்ன்றன. தமிழகத்தில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு மூட்டை நீண்ட நேரம் அனாதையாக கிடந்ததால் இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த மூட்டையைக் கைப்பற்றி சோதனை நடத்தினர்.
சோதனையில் மூட்டைக்குள் சுமார் 9 கிலோ வெடி மருந்து இருந்தது. நாச வேலைக்கு இந்த வெடி மருந்தை பயன்படுத்த கொண்டு வந்திருக்காலம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications