ரேஷன் கடை கூட்டத்தில் சிக்கி கர்ப்பிணி காயம் - சிசு பலி
சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பிணியை கும்பல் நெட்டித் தள்ளியதால் அவர் வயிற்றில் இருந்த குழந்தை பரிதாமாக இறந்தது.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகில் உள்ளது பெலக்காடு. இங்கு உள்ள நியாயவிலைக் கடையில் பெலாக்காடு, மதூர், அரங்கம் போன்ற பகுதிளைச் சேர்ந்த கிராம மக்கள் பொருட்கள் வாங்குவது வாடிக்கை.
இந்த நிலையில் ரேஷன்கடையில் மண்ணெண்ணை வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக கூலித் தொழிலாளியான கரியமலை என்பவரின் மனைவி குப்பாயி (25) சென்றுள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணி.
இந்த நிலையில் மண்ணெண்ணை வாங்க கும்பல் போட்டி போட்டி நெட்டித் தள்ளியதில் குப்பாயி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றி வாழவந்திநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதலுதவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சேலம் அரசு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது டாக்டர்கள் குப்பாயிக்கு பரிசோதனை செய்தனர். அப்போது, குப்பாயி வயிற்றில் உள்ள குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதனையறிந்து குப்பாயியும், அவரது கணவரும் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications