கிளிநொச்சியை அடைந்த தமிழக நிவாரணம்-ராணுவம் சூறை
வெள்ளிக்கிழமை முதல் இந்தப் பொருட்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உணவு மற்றும் உடை ஆகியவை வந்துள்ள போதிலும் நேற்று அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து வந்த இந்த நிவாரணப் பொருட்களை கிளிநொச்சித் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பெற்றுச் சென்றனர்.
நேற்றும், இன்றும் மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் பொருட்களைப் பெற அலை மோதியது.
பலர் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். பொருட்களை வாங்க போட்டா போட்டியும் காணப்பட்டது.
தமிழக மக்களிடமிருந்து என்று நிவாரணப் பொருட்கள் அடங்கிய பையில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தில், தமிழகத்தின் உணர்வாக இருப்பதாக தெரிவித்த மக்கள், தமிழக மக்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8,000 உணவு மூட்டைகளும், 2,000 உடை மூட்டைகளும் வந்துள்ளன.
நிவாரணப் பொருட்களை சூறையாடிய ராணுவம்:
இதற்கிடையே, தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை வழியிலேயே மறித்து அவற்றை எடுத்து சேதப்படுத்தியதாக ராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவு மூட்டைகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பொருட்களில் பாதியை எடுத்து விட்டு மூட்டைகளை கட்டி ராணுவத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் உண்மையிலேயே அனுப்பப்பட்ட அளவில் பொருட்கள் தங்களது பகுதிகளுக்கு வந்து சேரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் தமிழர்கள்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி













Click it and Unblock the Notifications