கேஸ் விலை-குறைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது போல சமையல் எரிவாயு விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவுக்கும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா என்று நாட்டு மக்கள் எதிர் பார்த்து காத்திருந்த வேளையில் அவற்றின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
இந்த விலை குறைப்பால் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். இந்த அறிவிப்பை வெளி யிட்டதற்கு நான் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்.
தி.மு.க.அரசு 2006-07ம் ஆண்டில் சமையல் வாயு இணைப்புடன் கியாஸ் அடுப்பு இலவசமாக வழங் கும் திட்டத்தை பெண்கள் பயன் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 3 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூ.60 கோடியில் அமுல்படுத்தப்பட்டது.
2007-08ம் ஆண்டில் கியாஸ் இணைப்புடன் 7.52 லட்சம் கியாஸ் அடுப்புகள் ரூ.160 கோடியில் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. இதுவரை 10.52லட்சம் ஏழை குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்துள்ளன. இந்த திட்டம் 2008-09 ஆண்டிலும் தொடரும் மேலும் 8 லட்சம் ஏழை குடும்பம் பயன்பெறும். இதற்கான பட்ஜெட் ஒதுக் கீடு ரூ.160 கோடி.
சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்று தாய் மார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சமை யல் வாயு விலையை உயர்த் துவதற்கு முன்பு இருந்த பழைய விலைக்கே குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து நல்ல அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்புக்கு எனது மன மார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல முரளி தியோராவுக்கும் கடிதத்தின் நகலை அவர் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications