தீவிரவாத 'தொழிற்சாலையில்' பிறந்து, வளர்ந்த கஸாவ்!

இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் அப்சர்வர் இதழில் வெளியாகியுள்ள செய்தி...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓகாரா மாவட்டத்தில்தான் கஸாவ் பிறந்த பரீத்கோட் கிராமம் உள்ளது.
கஸாவின் தந்தை பெயர் முகம்மது அமீர், தாயார் பெயர் நூர்.
இந்தத் தகவல்கள் கஸாவ் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது. இதை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த வாரம் பரீத்கோட் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பரீத்கோட் கிராமத்தில் மொத்தம் 478 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் முகம்மது அமீர், நூர் இலாஹி ஆகிய தம்பதிகளின் பெயரை பாகிஸ்தான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் அடையாள அட்டை எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று அதிகாரிகள் விசாரித்தபோது அங்கிருந்தவர் தனது பெயர் முகம்மது அமீர் என்றும், ஆனால் தான் அஜ்மலின் மாமனார் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிகாரிகளுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அஜ்மல் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் என்பது உறுதியாகி விட்டது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில், இந்தக் கிராமம் தீவரவாதிகளின் சொர்க்க பூமியாகும். இங்குதான் லஷ்கர் இ தொய்பா அமைப்பினருக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புவார்கள். இங்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மும்பையி்ல் பிடிபட்டுள்ள பையனும் (அஜ்மல்) இந்த ஊரைச் சேர்ந்தவன்தான்.
மும்பையில் தாக்குதல் நடந்த உடனேயே இங்கு தகவல் வந்து விட்டது. எங்களது இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள், ஜிஹாத் செய்ய வருமாறு கூறி மூளைச் சலவை செய்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலரே அதைச் செய்கின்றனர். ஆனால் இது தவறு என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர் என்றார் அவர்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications