டெல்லி சட்டசபை காங். தலைவராக ஷீலா தீக்ஷித் தேர்வு
டெல்லி: டெல்லி சட்டசபை காங்கிரஸ் தலைவராக 3வது முறையாக ஷீலா தீக்ஷித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்ட 42 எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் ஷீலா தீக்ஷித் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ய்பட்டார்.
கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோஷினா கித்வாய், நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால், டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
இன்றைய கூட்டம் 90 நிமிடங்களில் முடிந்தது. கடந்த முறை ஷீலா தீக்ஷித் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ய ஒரு வார காலமானது என்பது நினைவிருக்கலாம். அப்போது ஷீலாவை தேர்ந்தெடுக்க அதிருப்தி கடுமையாக இருந்தது. இதனால் தேர்வு தாமதமானது. கடைசியில் சோனியாவின் ஆதரவுடன் ஷீலா முதல்வர் பதவியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷீலா தீக்ஷித் முதல்வர் பதவியில் அமரவிருப்பது இது 3வது முறையாகும்.












Click it and Unblock the Notifications