தூத்துக்குடி-மும்பையில் பலியான என்ஜீனியர் உடல் அடக்கம்
தூத்துக்குடி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்ட என்ஜீனியரின் உடல் அடக்கம் புதியம்புத்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயக்குமார். மதுரை ரயில்வே எக்ஞ்சேஞ்சில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23ம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கு சுற்றுலா சென்றார்.
26ம் தேதி காலை மும்பையிலிருந்து தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மும்பை தினகரன் நாளிதழில் படத்துடன் காணவில்லை என விளம்பரம் செய்தனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த மும்பை காவல்துறையினர் புதியம்புத்தூரில் உள்ள அவரது சகோதரர் செல்வினை தொடர்பு கொண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி அறிந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஜெயக்குமாரின் உடலை உரிய முறையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
உறவினர்கள் செல்வின், தேவக்குமார் ஆகியோர் மும்பை சென்று ஜெயக்குமாரின் உடலை பெற்று விமானம் மூலம் மதுரை எடுத்து வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதியம்புத்தூருக்கு கொண்டு வந்தனர்.
அங்கு உடலுக்கு தாசில்தார் தமிழ்மணி, மதுரை கோட்ட தொலைதொடர்பு அதிகாரி வீராபாகு உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயக்குமாரின் உடல் புதியம்புத்தூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications