டல்லடிக்கும் இந்திய பங்குச் சந்தை
மும்பை: நேற்று உச்ச கட்டத்திலிருந்த பங்குச் சந்தை வர்த்தகம் இன்று மந்த கதியில் துவங்கி உள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தில் 7 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற சென்செக்ஸ், போகப்போக புள்ளிக்களை இழக்கத் துவங்கியது.
11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2 புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று 9656 ஆக உள்ளது. நிப்டியில் 6 புள்ளிகள் இழப்பு ஏற்பட்டு 2921.95 ஆக உள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் எதிர்மறையாகத் திரும்பும் ஊசலாட்ட நிலைதான் இன்று முழுவதும் நிலவும் என எதிர்பார்க்கிறார்கள் பங்குச் சந்தை வர்த்தகர்கள். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் இன்றைய 'இன்ட்ரா டே' வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான் நிலவுகிறது.
அமெரிக்க பங்குச் சந்தைகள் டோவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக்கில் இன்று ஓரளவு திருப்தியான வர்த்தகம் இருந்தது. டோவ் ஜோன்ஸ் 70 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications