Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் விளைவுகள் ஏற்படும் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Obama
வாஷிங்டன்: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய வானொலிக்கு வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் மண்ணில்தான் இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும்.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்தியாவில் பெரும் கொதிப்பும், கொந்தளிப்பும், கோபமும் காணப்படுகிறது. இது எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள மிரட்டலாகும்.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பதால், கண்டிப்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மேலும், மும்பை சம்பவத்தில் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.

பாகிஸ்தான் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது (லக்வி, அஸார் கைது). இதை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், உண்மையில் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் கிட்டத்தட்ட போர் புரியும் நிலையில் இருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வேறு மாதிரியாக உள்ளன.

பாகிஸ்தான் அரசு மக்கள் அரசு, சட்டப்பூர்வமான அரசு. அதேபோலத்தான் இந்தியாவிலும் ஒரு அரசு உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தபோது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதுதொடர்பாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது என்றார் ரைஸ்.

ஓபாமா கொதிப்பு:

மும்பையில் கண்டதைப் போன்ற தீவிரவாத தாக்குதலை எனது தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உலக நாடுகளுக்கு உறுதிபடத் தெரிவிக்கப் போவதாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிகாகோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், உலக நாடுகளுக்கு நான் விடுக்கப் போகும் செய்தி என்னவென்றால், மும்பையில் நடந்ததைப் போன்ற தீவிரவாதத் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதுதான். இதை நான் உறுதிபடத் தெரிவிக்கப் போகிறேன்.

உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை மேலும் வலுப்படுத்த எனக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் ஒரு இஸ்லாமிய நாட்டுக்குச் சென்று அங்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளேன்.

அந்த நாட்டின் மூலம் அமெரிக்காவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தப் போகிறேன்.

அந்த நாட்டில் நான் நிகழ்த்தப் போகும் உரையின் மூலம், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் உறுதிபட எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறேன் என்றார் ஓபாமா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+