தமிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி
தூத்துக்குடி: பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கள்ள நோட்டுப் புழக்கம் குறைவாகவே உள்ளதாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த சிறப்பு மகளிர் சுய உதவிக் குழு தொடக்க விழா மற்றும் மீனவ உழவர் மன்றத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஜோசப் பேசுகையில், ரிசர்வ் வங்கியால் 2005ம் ஆண்டிலிருந்து 1,000, 500 என ரூபாய் நோட்டுகள் பருத்திக்கூழ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை சட்டைப்பையில் வைத்து தண்ணீரில் நனைத்தாலும் எளிதில் கிழியாது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளில் எண்கள் ஒரே அளவில், சீரான இடைவெளியில் இருக்கும். காந்தி படம் தெளிவாக தெரியும். கள்ள நோட்டுகளில் அத்தகைய சிறப்புகள் எதுவும் இருக்காது.
உ.பி.,யில் ஒரு வங்கியில் கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமாக இல்லை.
இந்தியாவில் கள்ள நோட்டை முற்றிலுமாக புறக்கணிக்க நடவடிக்கை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி அதற்காக பிரத்யேக அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை தயாரித்து வருகிறது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தால் அந்த பேப்பரில் மஞ்சள் வண்ணம் ஏற்படும். அதிலிருந்து நாம் ஒரிஜினல் நோட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications