சென்செக்ஸ் இன்று: நிலையற்ற வர்த்தகம்!
மும்பை: நேற்று போலவே இன்றும் பெரும் ஊசலாட்டத்துக்கிடையே இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் பரிமாற்றம் நடந்தது.
காலை வர்த்தகம் துவங்கியதும் 300 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், பிற்பகலில் அந்தச் சரிவிலிருந்து போராடி மீண்டது. ஆனால் வர்த்தக நேரம் முடிவுறும் தறுவாயில் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன், கணிக்க முடியாத அளவுக்கு பங்குகள் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 2745 புள்ளிகளில் சென்செக்ஸஸ் நிலைப் பெற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். 1.60 புள்ளிகள் மட்டும் அதிகம் பெற்று 2921-ல் முடிவுற்றது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஓரளவு திருப்திகரமாக பரிமாறின.
டிஎல்ப்தான் அதிகபட்சமாக 7.15 சதவிகிதம் கூடுதல் விலைக்குப் போனது. ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் 6.53 சதவிகிதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.12 சதவிகிதமும் கூடுதலாக விலை போயின. ஹிண்டால்கோ, டாடா பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் நல்ல விலைக்குப் போயின.
இன்றைய வர்த்தகத்தில் நஷ்டமடைந்த நிறுவனங்கள் டிசிஎஸ், விப்ரோ, ஓஎன்ஜிசி., இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் போன்றவை.












Click it and Unblock the Notifications