அஞ்சலக சேமிப்பில் கை வைத்த போஸ்ட் மாஸ்டர்
உளுந்தூர்பேட்டை: அஞ்சலகத்தில் டெபாசிட் செய்த பணத்தை துணை போஸ்ட் மாஸ்டரே மோசடி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரிய செவலை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். ஓய்வு பெற்ற பொறியாளர்.
இவர் தற்போது ஆந்திர மாநிலம் நத்தியால் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியசெவலை அஞ்சல் நிலையத்தில் ரூ 37,500 டெபாசிட் செய்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கராஜ், பெரிய செவலை தபால் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணக்குகளை தணிக்கை செய்துள்ளார்.
அப்போது அந்த அஞ்சல் அலுவலகத்தில் சப் -போஸ்ட் மாஸ்டராக உள்ள ராமலிங்கம் என்பவர் உதயகுமார் டெபாசிட் செய்த தொகையை தனது பெயரில் மாற்றி டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து அஞ்சலக கண்காணிப்பாளர் தங்கராஜன் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளி்த்தார்.
அதன்பேரில் சப்-போஸ்ட் மாஸ்டர் ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications