இந்தியா-பாக் போர் பதற்றம்: டெல்லி விரையும் இங்கிலாந்து பிரதமர்

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் தொடுக்க மாட்டோம் என்று கூறினாலும், படைகளை தயார் செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுடன் அதை உடனடியாக கண்டித்த பிரெளன் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். பிரிட்டிஷ் கமாண்டோக்கள், உளவுப் பிரிவினரின் உதவியை வழங்க முன் வந்தார். அதை இந்தியா ஏற்கவில்லை.
இதையடுத்து தீவிரவாத செயல்களை தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற போலீஸ் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் தீவிரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் இணைந்து பிரெளனும் கடும் நெருக்கடி தந்து வருகிறார்.
இதற்கிடையே மும்பைத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்கும்படி இந்தியா கோரி வருவதை பாகிஸ்தான் ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயும் போர் பதற்றம் நிலவுகிறது. இதை இரு நாடுகளும் மறுத்தாலும் படைகளை அவை தயார் செய்து வருவதை அமெரிக்காவும் பிரிட்டனும் கவலையுடன் உற்று நோக்கி வருகின்றன.
இந் நிலையில், கார்டன் பிரெளன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் அவசர பயணமாக இந்தியா வருகிறார். பிரெளனின் இந்த வார வழக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது இந்தியப் பயணம் இல்லை. எனினும் மும்பைத் தாக்குதல் பற்றி அவர் நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச விரும்புவதால் திடீரென இந்தியா வருகிறார்.
அவர் பாகிஸ்தானுக்கும் கூட செல்லலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications