சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர வாசல்கள் மீண்டும் திறப்பு
சிதம்பரம்: மும்பை தாக்குதலை அடுத்து பாதுகாப்பு கருதி மூடப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்று கோபுர வாயில்களும் அடைக்கப்பட்டன.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கீழ கோபுர வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கோவிலில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பக்தர்கள் நலன் கருதி அனைத்து கோபுர வாயில்களையும் திறக்க வேண்டும் என நடராஜர் கோவில் பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்.டி.ஓ-விடம் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், மூடப்பட்ட கோபுர வாயில்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடராஜர் கோவிலின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications