ஜமாத் அமைப்புக்குத் தடை: ஆனால் அறக்கட்டளைகள் செயல்படுமாம் - கிலானி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜமாத் உத் தவா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும், அதன் அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார். இதனால் அறக்கட்டளைகள் என்ற பெயரில் ஜமாத் அமைப்பு தொடர்ந்து செயல்பட வழி பிறந்துள்ளது.
இதுகுறித்து கிலானி கூறுகையில், இஸ்லாமிய அறக்கட்டளைகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைத் துண்டிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும் அவற்றின் வசமம் உள்ள பள்ளிகள் உள்ளிட்டவற்றை அரசே எடுத்துக் கொள்ளும். அங்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதன் நிர்வாகம் தொடர்ந்து அரசால் கண்காணித்து வரப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications