டெல்லி தோல்வி-பாஜக எம்பி மல்ஹோத்ரா ராஜினாமா
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மல்ஹோத்ரா. சமீபத்தில் முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மல்ஹோத்ரா. இதையடுத்து சட்டசபை உறுப்பினர் பதவியை வைத்துக் கொள்ள தீர்மானித்தார் மல்ஹோத்ரா. இதைத் தொடர்ந்து இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
தனது கடிதத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அனு்பி வைத்துள்ளார் மல்ஹோத்ரா.
மல்ஹோத்ரா, லோக்சபா பாஜக நாடாளுமன்றக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்ஹோத்ராவை முதல்வராக அறிவித்ததால் தான் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதாக பல்வேறு பாஜக தலைவர்களே கருத்துத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு டெல்லி தேர்தல் பொறுப்பாளரான அருண் ஜேட்லி மட்டுமே ஆதரவாக உள்ளார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஜேட்லிக்கும் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.