சிபிஐ அதிகாரிகளுக்கு இனி ஆயுதப் பயிற்சி கிடையாது
டெல்லி: சிபிஐ அதிகாரிகளுக்கு இனி ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட மாட்டாது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிபிஐ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ஆயுதப் பயிற்சி குறித்த பாடம் நீக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து சிபிஐ இணை இயக்குநர் சலீம் அலி கூறுகையில், சிபிஐ அதிகாரிகளுக்கான பயிற்சிப் பாடத் திட்டத்திலிருந்து ஆயுதப் பயிற்சி பிரிவை எடுத்து விட்டோம். அதற்குப் பதிலாக லேட்டஸ்ட் சாப்ட்வேர் மற்றும் அதி நவீன சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது, கையாளுவது என்ற திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு இவை மிகவும் உதவும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
உலகில் இன்று நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும், கடைசியில் சைபர் ஸ்பேஸில்தான் வந்து முடிகிறது. எனவே புதிய அதிகாரிகளுக்கு, சைபர் குற்றங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் அதிக பயிற்சி அளிக்கப்படும்.
காஸியாபாத்தில் உள்ள சிபிஐ அகாடமியில் தற்போது 38 பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த தலைமுறை சிபிஐ அதிகாரிகளாக இவர்கள் உருவாகி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் முதல் காரோட்டுவது வரை இவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதேபோல அதி நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் இவர்களுக்கு புகட்டுகிறோம். எந்த வகையான சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செயல்படும் திறனுடன் இவர்கள் வெளியே வருவார்கள்.
இப்போதைய காலகட்டத்தில் உடல் திறன் மட்டும் முக்கியமாக இல்லை. மாறாக புத்திசாலித்தனமும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதற்கேற்ப இந்த இளம் அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் என்றார் அலி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications