சபரிமலை அப்பம் பிரசாதத்தி்ன் தரம்-புகார்
திருவனந்தபுரம்: சபரிமலையில் தரப்படும் பிரசாதமான அப்பம் தரமற்றதாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதையடுத்து அது குறித்து சபரிமலை உயர்மட்டக் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
ஆரம்பத்தில் அப்பம் வினியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் அடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பம் அதிகளவில் தயாரிக்கப்பட்டன.
ஆனால், அப்பம் தரமில்லாமல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்பம் பக்குவமாவதற்குள் பாக்கெட்டில் அடைக்கப்படுவதால், விரைவில் கெட்டு விடுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெயக்குமார், அப்பம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அப்பம், அரவணை பிரசாதங்களின் தரம் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, எட்டு லட்சம் டின் அரவணையும், ஒரு லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் தேவைக்கேற்ப பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.
கடைகளில் பிரசாதங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications