For Daily Alerts
Just In
கல்பாக்கம் அணு மின் நிலையம் மீது விமானங்கள் பறக்கத் தடை
மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணு மின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ள பகுதியில், விமானங்கள் பறக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு மின் நிலையம் உள்ள பகுதியில், 10 கிலோமீட்டர் சுற்றளவில், 10 ஆயிரம் அடி உயரம் வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இதுதொடர்பான உத்தரவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனு்பபியுள்ளது.
Comments
Story first published: Wednesday, December 17, 2008, 10:50 [IST]