போராட்டம் நடத்த வந்த அதிமுக பிரமுகர் விபத்தில் பலி
தென்காசி: தென்காசியில் நடந்த அதிமுக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மானூர் ஒன்றிய அதிமுக கிளைச் செயலாளர் சேர்மன் கனி சாலை விபத்தில் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசி ஜம்பு நதி நீர்த்தேக்கத் திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் இதை கிடப்பில் போட்டு விட்டதாக கூறி, அதைக் கண்டித்து இன்று தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் வேன்களில் தென்காசி வந்தனர். அதேபோல மானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 20 அதிமுகவினர் மானூர் ஒன்றிய திமுக கிளைச் செயலாளர் சேர்மன் கனி தலைமையில் வந்தனர்.
அவர்களது வேன் பாவூர் சத்திரம் அருகே வந்தபோது, எதிரே தூத்துக்குடியை நோக்கிப் போன லாரி பயங்கரமாக மோதியது. இதில் சேர்மன் கனி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications