நாடாளுமன்ற தேர்தல்: தமிழக காங். எம்பிக்களுடன் சோனியா ஆலோசனை
நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல், கூட்டணிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் நிலைமை குறித்து தலைவர்கள், எம்பிக்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரவுள்ளது.
இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் எம்.பிக்களுடன் சோனியா அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், மணிசங்கர் அய்யர்,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது தமிழக நிலைமை குறி்த்து சோனியாவிடம் இவர்கள் விளக்கினர். திமுக கூட்டணிக்குள் பாமக வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.
மேலும் திமுக, அதிமுக கூட்டணிகளின் வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் போட்டியிட கோர வேண்டிய தொகுதிகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் சோனியா கேட்டறிந்ததாகத் தெரிகிறது.