For Daily Alerts
Just In
பெங்களூர் போஸ்ச் ஆலை தற்காலிகமாக மூடல்
டெல்லி: ஆட்டோ உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான போஸ்ட் லிமிட்டெட் நிறுவனம், தனது பெங்களூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு பெங்களூர் போஸ்ச் ஆலை மூடப்பட்டிருக்கும்.
உற்பத்திச் செலவை சமாளிப்பதற்கும், தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவும் இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாகநாதபுராவில் உள்ள போஸ்ச் நிறுவனத்தின் ஸ்டார்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் உற்பத்திப் பிரிவு இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Sunday, December 21, 2008, 10:51 [IST]