ப.சிதம்பரத்துடன் இன்டர்போல் தலைவர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் தலைவர் ரொனால்ட் கே நோபல் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
சனிக்கிழமை 20 நிமிட நேரம் நடந்தது இந்தச் சந்திப்பு.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் பெயர்கள், கைரேகைகள், டி.என்.ஏ. தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை இன்டர்போல் அமைப்பின் சர்வதேச தகவல் மற்றும் புள்ளி விவர மையத்தில் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்றும், தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் பிடிபட்ட தீவிரவாதி தொடர்பாக கிடைக்கும் அனைத்து தகவல்களையும் தருவதாகவும் ப.சிதம்பரத்திடம் நோபல் உறுதியளித்தார்.
மேலும், இன்டர்போல் அமைப்பில் உள்ள 186 நாடுகளுக்கும் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தியாவின் விசாரணைக்கு இன்டர்போல் உதவி செய்யும் என்றும் நோபல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications