அமைச்சர் ஜெயராம் ரமேஷின் பாக். பயணம் ரத்து
கொச்சி: மும்பை தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான முறையில் பிசினஸ் பேச முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொச்சியி்ல் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான முறையில் பிசினஸ் பேச முடியாது.
எனவேதான் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்லவிருந்ததை ரத்து செய்து விட்டேன்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
நிலைமை சரியாகும் வரை இந்தியா, பாகிஸ்தான் தொடர்பான வர்த்தகப் பேச்சுக்கள், மேம்பாட்டுப் பேச்சுக்கள் காத்திருக்க வேண்டியதுதான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications