அதிரடித் தாக்குதல் - 60 ராணுவத்தினர் பலி - 2 கி.மீ பகுதியை மீட்ட புலிகள்
இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்குத் தொடங்கிய முற்பகல் 11.30 வரை வரை விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இதில் ராணுவத்தின் வசம் இருந்த 2 கிலோமீட்டர் தொலைவிலான தடுப்பரண் பகுதி மீட்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமைதான் இந்த பகுதியை ராணுவம் மீட்டிருந்தது. தற்போது அது மீண்டும் புலிகள் வசம் வந்துள்ளது.
விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர். தங்களது வசம் இருந்த பகுதியை விட்டு விட்டு ஓடினர்.
இந்த கடும் சண்டையில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 வீரர்களின் உடல்களைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். ஏராளமான ஆயுதங்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உதவியாக விமானப்படையும் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவம் ஓடி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 ராணுவ வீரர்களின் உடல்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.