விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: காங்.

சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கு இடையே திடீர் மோதல் மூண்டது.
3 தரப்பையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகளை, யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இது பெரியார் திராவிட கழகமாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அந்தக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டோம்.
அவர்களுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றார்.
ஜி.கே.வாசன் எச்சரிக்கை
மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், வன்முறையை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைப்பவர்களை அடக்குவோம், ஒடுக்குவோம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த விரும்பத்தகாத செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானு. இந்த சம்பவம் குறித்த உண்மமை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் வாசன்.
திருமாவளவனை கைது செய்க - இளங்கோவன்:
இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனைத் தாக்கியது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது உள்ளிட்டவற்றுக்காகவே திருமாவளவன் கட்சி நடத்தி வருகிறார்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீஸாருக்கு உள்ளது. ஆனால் சமீப காலமாக அவர்கள் காட்சிப் பொருளாகி விட்டனர்.
மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டபோதும் அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் சட்டக் கல்லூரியில் மாணவர்களை தாக்கியபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதை எப்படி சீரமைப்பது என்பது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டியிருக்கும் என்றார் இளங்கோவன்.
தாக்கியவர்களை கைது செய்க - ப.சிதம்பரம்:
சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சன்யமின்றி போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications