போலியா குறித்து புரளி-10 பேர் கைது
கோவை: போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தைகள் பலியானதாக வதந்தி பரப்பிய 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான உதயக்குமார் என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டு இத்தகவலைப் பரப்பிக் கொண்டிருந்தார்.
அதேபோல ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த யோகனாதன் என்பவரும் வதந்தி இதுபோல வதந்தி பரப்பிக் கொண்டிருந்தார். இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கோவை காந்திபுரம் சாலையில் 3 பேர் நின்று கொண்டு அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி தகராறு செய்தனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் குழந்தைகள் இறந்து விட்டன. நீங்கள் கடைகளை அடைக்காமல் வியாபாரம் செய்து கொண்டு இருக் கிறீர்களாப என்று கூறி அவர்கள் தகராறு செய்தனர். பாரதியார் சாலையில் ஒரு கடையின் கண்ணாடியை உடைத்தனர்.
உடனே ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் (28), பூபதி (28), குனியமுத்தூரை சேர்ந்த முகமது சாதிக்பாட்சா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதேபோன்று ராமநாதபுரம் பகுதியில் கடையை அடைக்க சொல்லி தகராறு செய்த ராமநாதபுரம் திருமால் வீதியை சேர்ந்த தலித் முருகன் (32), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (31), ராமலிங்கம் ஜோதிநகரை சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலியோ சொட்டு மருந்து குறித்து மக்களிடம் பீதியை கிளப்பியதாகவும், கவுண்டம்பாளையம் நகராட்சி ஜீப் கண்ணாடியை உடைத்ததாகவும் ரவி (35) மற்றும் இடிகரையை சேர்நத வினோத் (23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications