மலேசிய எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4700 பேர் வேலை இழப்பு!
கோலாலம்பூர்: அடுத்த 3 மாதங்களுக்குள் 4700 மலேசியர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துளளார்.
இதுகுறித்து அந்நாட்டின் மனித வள அமைச்சர் எஸ். சுப்பிரமணியன் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் சற்று நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் குறிப்பாக எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. 102 எலக்ட்ரானிக் நிறுவனங்களில் பணியாற்றும் 4749 பேர் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் வெளியேற்றப்பட்டே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழல் புரிந்து, தொழிலாளர் சங்கங்கள் அமைதி காப்பது பெரும் நிறைவாக உள்ளது. மற்ற நாட்டு தொழிற்சங்கங்களைப் போல வன்முறையில் இறங்காமல், எங்கள் நாட்டவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளனர்.
இனி மாவட்டம் தோறும் உள்ள தொழில் நிறுவனங்களைக் கண்காணித்து, அதில் வேலை இழப்புக்கு ஆளாகும் நபர்களின் விவரங்களைச் சேகரிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிவது குறித்தும் முடிவு செய்யப்படும், என்றார்.
சர்வதேச பொருளாதார மந்தத்தில் மலேஷியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் வளளர்ச்சியை முடுக்கிவிட மலேசிய அரசு 2.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications