ஆட்டோ டிரைவரைத் தாக்கிய திமுக கவுன்சிலர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவரை தாக்கியதாக திமுக கவுன்சிலரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் திரு்மலைநம்பி. ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை அதே தெருவிலுள்ள ஸ்டாண்டில் நிறுத்தியுள்ளார். மேலும் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.
அதே ஸ்டாண்டில் 49வது வார்டு கவுன்சிலர் இசக்கி்முத்துவின் தம்பி பொன்ராஜ் என்பவரும் தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக திருமலைநம்பிக்கும், பொன்ராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொன்ராஜ், அவர்களது உறவினர் இசக்கிமுத்து ஆகியோர் சேர்ந்து திருமலை நம்பியை தாக்கினர். இதுகுறித்து அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் அபிரகாம் குரூஸ் விசாரணை நடத்தி கவுன்சிலர் இசக்கிமுத்து உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications