யுஎஸ்ஸை வெறுக்கும் அரபு நாடுகள்-ரைஸ்
வாஷிங்டன்: அரபு உலகில், புஷ் நிர்வாகத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க அரசுக்கு செல்வாக்கு இல்லை. மத்திய கிழக்கில் வசிக்கும் மக்கள் சுதந்திரமாக வசிக்க வேண்டும். சர்வாதிகாரப் பிடியிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
அரபு நாடுகளிடம் தற்போது அமெரிக்காவுக்கும், புஷ் நிர்வாகத்திற்கும் புகழ் இல்லை. இஸ்ரேலின் உரிமைகளைக் காக்க அமெரிக்கா உறுதியுடனும், தீவிரமுடனும் செயல்பட்டு வருவது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதேசமயம், பாலஸ்தீனியர்கள் தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றும் அமெரிக்கா பாடுபட்டு வருவதை அவர்கள் மறந்து விடக் கூடாது.
சில அரபு நாடுகளில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு காணப்படுகிறது. புஷ் அரசின் கொள்கைகள் சிலவற்றை அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த உலகும் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதாக கூறி விட முடியாது.
அமெரிக்கா மீதான அரபு உலகின் கோபம், புஷ் நிர்வாகத்தால் ஏற்பட்டதல்ல. புஷ் நிர்வாகத்தோடு இது முடிந்து விடக் கூடியதும் அல்ல.
இந்த நிலை படிப்படியாக மறையும், அரபு உலகிலும் அமெரிக்காவுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் ரைஸ்.












Click it and Unblock the Notifications