சபரிமலை சிறப்பு ரயிலில் தீ-கீழே குதித்தவர்கள் காயம்
ஈரோடு: சபரிமலை சிறப்பு ரயிலில் ஈரோடு அருகே தீப்பிடித்துக் கொண்டது. அந்தப் பெட்டியில் இருந்த பக்தர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர். கீழே குதித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்திலிருந்து கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்திலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது.
22 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 1,800க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர்.
இந்த ரயில் நேற்று காலை 11.30 மணி அளவில் அந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது 21வது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியது. கீழ்ப்பகுதியில் தீ எரிந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் அபாய சங்கிலியை இழுத்தனர். இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, நிற்க ஆரம்பித்தது.
ஆனால், ரயில் நிற்பதற்கு முன்பே தீப்பிடித்த பெட்டியில் இருந்தவர்கள் கீழே குதித்தனர்.
அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் சென்று கொண்டிருந்தது. கீழே குதித்தவர்கள் அந்த ரயிலில் சிக்காமல் மயிரிழையில் உயிர் தப்பினர்.
கீழே குதித்தவர்களில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ரெயில் நின்றவுடன், என்ஜின் டிரைவரும் ரெயிலில் இருந்த ரெயில்வே ஊழியர்களும் கீழே இறங்கி தீப்பிடித்த பெட்டி அருகே ஓடி வந்தனர்.












Click it and Unblock the Notifications