ஆக்ஷனுக்கு தயாராகிறது விமானப்படை - ரோந்து ஒத்திகை
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், சத்தமே போடாமல் ஆயத்த நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெல்லிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை முறியடிக்கும் வகையில் டெல்லிக்கு அருகே உள்ள ஹின்டன் விமான தளத்தில் மிக் 29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமான தளங்களிலும் தாக்குதல் நடத்தும் வகையில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
5000 இலக்குகள் ...
தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய விமானப்படை செய்து முடித்து விட்டதாம்.
இதுகுறித்து இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்திய தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் பி.கே.பார்போரா கூறுகையில், உலகின் 4வது பெரிய விமானப்படை இந்திய விமானப்படை. நமது பலத்துக்கு முன்பு பாகிஸ்தான் சாதாரணமானது.
நமது விமானப்படையின் பலம், தாக்குதல் திறனை பாகிஸ்தான் நன்கு அறியும். எனவேதான் அது பயப்படுகிறது.
விமானப்படைக்கு தாக்குதல் கட்டளை கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தும் வகையில், ஆயத்த நிலையில் விமானப்படை உள்ளது.
5 மணி நேரத்திற்குள் அனைத்தும் காலி ...
பாகிஸ்தானில் உள்ள 5000 இலக்குகளை நாங்கள் குறி வைத்துள்ளோம். இந்த இலக்குகளை 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் தாக்கி அழிப்போம்.
அதேசமயம், பாகிஸ்தானிலிருந்து நமக்கு ஆபத்து வந்தால் அந்த ஆபத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் மேற்குப் பிராந்திய பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றார் பார்போரா.
மேற்கு பிராந்திய விமானப்படையின் எல்லை, சியாச்சின் சிகரம் முதல் முதல் ராஜஸ்தான் வரை நீண்ட, நெடிய எல்லையைக் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications