ஆக்ஷனுக்கு தயாராகிறது விமானப்படை - ரோந்து ஒத்திகை
டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், சத்தமே போடாமல் ஆயத்த நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெல்லிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை முறியடிக்கும் வகையில் டெல்லிக்கு அருகே உள்ள ஹின்டன் விமான தளத்தில் மிக் 29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர மேற்கு பிராந்தியத்தில் உள்ள விமான தளங்களிலும் தாக்குதல் நடத்தும் வகையில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
5000 இலக்குகள் ...
தாக்குதல் நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய விமானப்படை செய்து முடித்து விட்டதாம்.
இதுகுறித்து இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்திய தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் பி.கே.பார்போரா கூறுகையில், உலகின் 4வது பெரிய விமானப்படை இந்திய விமானப்படை. நமது பலத்துக்கு முன்பு பாகிஸ்தான் சாதாரணமானது.
நமது விமானப்படையின் பலம், தாக்குதல் திறனை பாகிஸ்தான் நன்கு அறியும். எனவேதான் அது பயப்படுகிறது.
விமானப்படைக்கு தாக்குதல் கட்டளை கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தும் வகையில், ஆயத்த நிலையில் விமானப்படை உள்ளது.
5 மணி நேரத்திற்குள் அனைத்தும் காலி ...
பாகிஸ்தானில் உள்ள 5000 இலக்குகளை நாங்கள் குறி வைத்துள்ளோம். இந்த இலக்குகளை 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் தாக்கி அழிப்போம்.
அதேசமயம், பாகிஸ்தானிலிருந்து நமக்கு ஆபத்து வந்தால் அந்த ஆபத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் மேற்குப் பிராந்திய பகுதிகளை காப்பாற்ற முடியும் என்றார் பார்போரா.
மேற்கு பிராந்திய விமானப்படையின் எல்லை, சியாச்சின் சிகரம் முதல் முதல் ராஜஸ்தான் வரை நீண்ட, நெடிய எல்லையைக் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications